சொற்களைப் பற்றி பேச ஆரமித்தால் ஓராயிரம் எண்ணங்கள் வருகிறது நேற்று பயனுள்ளச் சொற்களைப் பேசும்போதே பயனற்றச் சொற்களின் பாதிப்புகளை பற்றி மனம் அசைபோட ஆரமித்துவிட்டது .
பொதுவாக நமக்கு பொருட்களின் மீது ஒரு பிடிப்பு எப்போதும் இருக்கிறது குடியிருந்த வீட்டை மாற்றும் பொது நம்மை மீறி ஒரு சோகம் தொற்றிகொள்ளும் .அந்த வீடு நமக்கு போதுமானதாய் இல்லை நமக்கு பிடிக்கவில்லை என்றுதான் வேறு ஒரு வீட்டிற்கு குடி பெயருவோம் ஆனாலும் அது பழகிய வீடு என்பதாலும் நம் வாழ்வின் இனிமையான நினைவுகள் அந்த வீட்டில் நடைபெற்றதாலும் அந்த வீட்டை பற்றிய நினைவுகளை நம் மனதில் இருந்து வெளியேற்ற மனமில்லாமல் அவதிபடுவோம் .
இப்படிதான் பல தேவையற்ற நினைவுகளும் சொற்களும் நமக்குள் வீணாக நிரம்பி கிடக்கிறது அதை அகற்ற மனமில்லாமல் குப்பையை போல அதை தூக்கிக்கொண்டு நடக்கிறோம் நம் வீட்டில் பாதிக்கு மேல் கிடக்கும் தேவையற்ற பொருட்கள் கூட இப்படி தூக்கிய எரிய மனமில்லாமல் நம் பழைய நினைவுகளை அதனோடு கழித்த காலங்களை நினைவு படுத்தும் விதமாக சேகரித்து வைக்கிறோம் பழைய செருப்பு ,பேனா என்று ஆரமித்து பல பயனற்ற பொருட்கள நம்மை சூழ்ந்து எப்போதும் இருக்கிறது .
தேவையற்ற என்று நான் சொல்லுவது வெறும் உபயோகத்தை மட்டும் சொல்லவில்லை ,கலை ரீதியாக ,இலக்கிய ரீதியாக,அழகுணர்வை உண்டாக்கும் விதமாக என்று பல பொருட்களை போல நமக்குள் அடைந்து கிடக்கும் சொற்களை .இவற்றால் நமக்கு பயன் இல்லை இடத்தை அடைத்துக்கொண்டு ஒரு சுமையாக தான் புழுதி படர்ந்து கிடக்கிறது .
இந்த சொற்களின் மீது நமக்கு இருக்கும் பிடிப்புத்தான் நம்மை கோபப்பட வைக்கிறது நம் சொற்களை ஒத்த சொற்களை வேறு யாராவது உபயோகிக்கும் போது நமக்கு கோபம் வருகிறது அவர்களை கண்டிக்கத் தோனுகிறது .ஆனால் சொற்கள் பொதுவானவை என்பதை நம்மால் ஏற்றுகொள்ள முடிவதில்லை நாமும் கூட ஏற்கனவே இருந்த சொற்களை தான் நகலாக கொண்டு நமக்கு ஏற்றார்போல மாற்றி இருக்கிறோம் என்ற புரிதல் இல்லாத போது மற்றவர்களிடம் சண்டை போட தோணுது .அவர்களை வார்த்தையால் வசை பாட நினைக்கிறோம் .
அந்த கடும் வார்த்தைகள் அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை நாம் உணர மறுக்கிறோம் .ஒரு சொல் ஒருவனை வானத்தில் பறக்க வைக்கும் அதே போல ஒரு சொல் ஒருவனை அவமானத்திற்கு உள்ளாக்கி பாதாளம் வரை தள்ளி அவன் உயிரை கூட பறிக்கும் வலிமை மிக்கது என்பதை உணர்ந்தால் நாம் மற்றவர்கள் மீது சொற்களை ஆயுதமாக பிரயோகிக்க மாட்டோம் .
சிலர் சொல்லும் அவ நம்பிக்கையான சொல் ஒருவரின் வாழ்கையை இறுதி நிலைக்கு தள்ளிவிடும் இதை நம் வாழ்வில் பலமுறை அனுபவித்து இருப்போம் .திடமான ஒருவன் ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் போது அவன் நம்பும் ஜோசியன் அவனிடம்" நீ இன்னும் பத்துநாட்கள் தான் உயிரோடு இருப்பாய் என்று சொல்லுகிறான் " அதை உண்மையென நம்பி அவன் கவலை பட்டு தன உயிரை விடுகிறான் .
ஆனால் வலிமையற்றவர்களை கூட வாழ்வில் நிமிர்த்து நிக்கவைக்கும் நம்பிக்கையான சொற்களை ஊட்டி மனித சமுதாயத்தை வீறு கொண்டு எலச்செய்த வலிமை மிக்க சொற்களும் உண்டு அப்படி பட்ட நல்ல மனிதர்கள் தங்கள் வாழ்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்து நம்பிக்கையை விதைத்து சென்றும் இருக்கிறார்கள் .
அவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்கதவர்கள் நம் பேச்சு மற்றவர்களை மகிழ்விக்கிறது என்பதற்காக அவர்களிடம் காசு வாங்கும் சொற்களை விற்கும் வியாபாரிகள் அல்ல மகாத்மா காந்தி , பாரதியார்,விவேகானதர் போன்ற மகான்கள் சாதாரண மனிதர்கள்தான் ஆனால் அவர்கள் தங்கள் சொற்களை மற்றவர்கள் நலனுக்காக பயன்படுத்தினார்கள் தன்னலம் கருதாமல் நேரம் காலம் பார்க்காமல் செலவு செய்தனர் .
ஆனால் இன்று நாம் ஒரு சொல்லை மற்றவருக்கு சொல்லும் போது அதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும் என்று ஆதாயம் தேடுகிறோம் அதனால் அந்த சொற்கள் வீரியம் இழந்து வெளிபடுகிறது .அது உபயோகமற்றதாகிவிடுகிறது .ஆகவே பிரதிபலன் எதிர்பார்க்காமல் மற்றவர்களை புண்படுத்தாத சிறந்த சொற்களை தன்னம்பிக்கை மிக்க சொற்களை நாம் மற்றவர்களுக்கு சமைக்கும் போது நம்முடைய உள்ளமும் நல்ல நீர் ஓடும் ஓடையாக தூய்மை அடையும் .
(ஓசை தொடரும் )