பவுடர் பூசி
சிலேடையும் பென்சிலையும்
தூக்கிக்கொண்டு
பள்ளிக்கு போகும்
என் நினைப்பில்
கொள்ளி வைத்து விட்டார்களே
இனி தேங்காய் நாறும்
சாம்பலும் சபீனாபவுடரும்தான்
என் கைகளில் நிரந்திரமா?
சீருடையக்கு பதிலாக
இனி எப்போதும்
அழுக்கு உடையில்
கந்தல் பொட்டலமாய்
என் வாழ்வு கழிய போகிறதே
கவனிப்பார் இல்லையா ?