குளிர் போர்த்தும்
கதகதப்பான உன் நினைவுகளில்
கழிக்கிறேன் என் வாழ்வை
எளிதில் விளக்கி விட முடியாத
எண்ணங்களின் கோர்வை
எனக்காகவே செதுக்கப்பட்ட உணர்வுகள்
தொலைவில் இருக்கிறாய் என்ற
உணர்வுகள் எப்போதும் இல்லை
அத்தனை நெருக்கமாய் உன் நினைவுகள்
சற்றென்று உள்நுழைந்து
கதவு சாத்திய காற்றை போல
அரை எங்கும் குளிரூட்டப்பட்ட நினைவுகள்
சருகை போல இலகுவாகி பறக்கும் மனம்
சத்தமில்லாத இடங்களில் கூட
இன்னிசையாய் உன் குரல்
மெல்ல கால்முளைத்து நடக்கும்
சிறகை போல ஆகாயத்திற்கும்
பூமிக்குமாய் பயணிக்கும் நான்
வாழ்கையை வாழுகிறேன் நான்
பார்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும்
பைத்தியகாரி என்று
உனக்குத் தெரியும் நான் உன் தேவதை என்று
எனக்குத் தெரியும் நீ என் தேவ தூதன் என்று