கதை கேட்கும் ஆர்வம் ஆதிக் காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது .அதிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். கூட்டுக் குடும்ப முறையில் வீட்டிலிருக்கும் பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு உணவூட்டவும் தூங்க வைக்கவும் கதை சொல்லும் பழக்கம் இருந்தது. கடந்த தலைமுறைவரை சிறுவர்களுக்கு உணவுடன் கதையும் பாட்டும் ஊட்டி வளர்க்கப்பட்டு வந்தது. கதையுணர்வும் பாட்டு உணர்வும் பள்ளிகூடங்களில் தருவதை விட வீடுகளில் அதிகமாக அளித்துவந்தனர். இன்று காலம் மாறியது இன்று பிசைந்து ஊட்டும் நிலை குறைந்து தாமே அள்ளி உண்ணும் நிலை வந்துள்ளது ஆகையால் கதை நூல்களும் அள்ளி உண்ணும் நிலையில் உள்ளது.
கதைகள் குழந்தைகளுக்கு சமுதாயம் பற்றிய செய்திகளை எடுதுரைபவைகளாக இருக்கிறது .கதைகள் மூலம் உயர்ந்த எண்ணங்களை அவர்கள் மனதில் வளரச் செய்ய இயலும்.கதைகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் மகிழ்ச்சியை >புத்துணர்வை கொடுக்க கூடியதாக கதைகள் இருக்கிறது .
ஆகவே நாம் நம் குழந்தைகளுடன் செலவிடும் நேரங்களில் கதையுடன் அவர்களை நெருங்கலாம் நாளைய சமுதாயதிற்கு நல்ல விதைகளை விதைக்கும் களமாக கதை அமையும் .
இன்றையை கதை
நல்ல நட்பு
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது .
இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்
(கதை தொடரும் )